Wednesday, June 23, 2010

அறத்துப்பால் பிறனில் விழையாமை - மொழி பெயர்ப்பு, Arathupal Piranil Vilaamai - Translation

                                    பிறனில் விழையாமை

141.    பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
          அறம்பொருள் கண்டார்கண் இல்.

142.    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
           நின்றாரின் பேதையார் இல்.

143.    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
           தீமை புரிந்துதொழுகு வார்.

144.    எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
           தேரான் பிறனில் புகல்.

145.    எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
          விளியாது நிற்கும் பழி.

146.    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
           இகவாவாம் இல்லிறப்பான் கண்.

147.    அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
           பெண்மை நயவா தவன்.

148.    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
          அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

149.    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
           பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

150.    அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
           பெண்மை நயவாமை நன்று.

No comments:

Post a Comment