Thursday, June 24, 2010

அறத்துப்பால் அருளுடைமை - மொழி பெயர்ப்பு, Araththupal Aruludaimai - Translation

அருளுடைமை

241.    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
           பூரியார் கண்ணும் உள.

242.    நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
           தேரினும் அஃதே துணை.

243.    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
           இன்னா உலகம் புகல்.

244.    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
           தன்னுயிர் அஞ்சும் வினை.

245.    அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
           மல்லன்மா ஞாலங் கரி.

246.    பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
          அல்லவை செய்தொழுகு வார்.

247.    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
           இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

248.    பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
           அற்றார்மற் றாதல் அரிது.

249.    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
           அருளாதான் செய்யும் அறம்.

250.    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
           மெலியார்மேல் செல்லு மிடத்து.

No comments:

Post a Comment