Wednesday, June 23, 2010

அறத்துப்பால் பொறையுடைமை - மொழி பெயர்ப்பு, Araththupal Perumaiudaimai - Translation

                                  பொறையுடைமை

151.    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
           இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

152.    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
           மறத்தல் அதனினும் நன்று.

153.    இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
           வன்மை மடவார்ப் பொறை.

154.    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
           போற்றி யொழுகப் படும்.

155.    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்  
           பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

156.    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
           பொன்றுந் துணையும் புகழ்.

157.    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
          அறனல்ல செய்யாமை நன்று.

158.    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
           தகுதியான் வென்று விடல்.

159.    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
           இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

160.    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
           இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

No comments:

Post a Comment