Thursday, June 24, 2010

அறத்துப்பால் துறவு - மொழி பெயர்ப்பு, Araththupaal Thuravu - Translation

                                      துறவு

341.    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
           அதனின் அதனின் இலன்.

342.    வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
           ஈண்டுஇயற் பால பல.

343.    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
           வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

344.    இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
           மயலாகும் மற்றும் பெயர்த்து.

345.    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
           உற்றார்க்கு உடம்பும் மிகை.

346.    யான் எனது என்னும் செருக்கு
          அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
           புகும்.

347.    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
           பற்றி விடாஅ தவர்க்கு.

348.    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
           வலைப்பட்டார் மற்றை யவர்.

349.    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
           நிலையாமை காணப் படும்.

350.    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
           பற்றுக பற்று விடற்கு.

அறத்துப்பால் நிலையாமை - மொழி பெயர்ப்பு, Araththupaal Nilaiyaamai - Translation

                                         நிலையாமை

331.    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
           புல்லறி வாண்மை கடை.

332.    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
           போக்கும் அதுவிளிந் தற்று.

333.    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
           அற்குப ஆங்கே செயல்.

334.    நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
           வாளது உணர்வார்ப் பெறின்.

335.    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
           மேற்சென்று செய்யப் படும்

336.    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
           பெருமை உடைத்துஇவ் வுலகு.

337.    ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
           கோடியும் அல்ல பல.

338.    குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
            உடம்பொடு உயிரிடை நட்பு.

339.    உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
           விழிப்பது போலும் பிறப்பு.

340.    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
           துச்சில் இருந்த உயிர்க்கு.

அறத்துப்பால் கொல்லாமை - மொழி பெயர்ப்பு, Araththupaal Kollamai - Translation

                                             கொல்லாமை

321.    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
           பிறவினை எல்லாந் தரும்.

322.    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
           தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

323.    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
           பின்சாரப் பொய்யாமை நன்று.

324.    நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
           கொல்லாமை சூழும் நெறி.

325.    நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
          கொல்லாமை சூழ்வான் தலை.

326.    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
           செல்லாது உயிருண்ணுங் கூற்று.

327.    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
           இன்னுயிர் நீக்கும் வினை.

328.    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
          கொன்றாகும் ஆக்கங் கடை.

329.    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
           புன்மை தெரிவா ரகத்து.

330.    உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
           செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
           யவர்.

அறத்துப்பால் இன்னாசெய்யாமை - மொழி பெயர்ப்பு Araththupaal Innaseiyamai

 இன்னாசெய்யாமை

311.    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
           செய்யாமை மாசற்றார் கோள்.

312.    கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
           செய்யாமை மாசற்றார் கோள்.

313.    செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
            உய்யா விழுமந் தரும்.

314.    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
           நன்னயஞ் செய்து விடல்.

315.    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
            தந்நோய்போல் போற்றாக் கடை.

316.    இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை  
           வேண்டும் பிறன்கண் செயல்.

317.    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
           மாணாசெய் யாமை தலை.

318.    தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
           மன்னுயிர்க்கு இன்னா செயல்.

319.    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
           பிற்பகல் தாமே வரும்.

320.    நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
           நோயின்மை வேண்டு பவர்.

அறத்துப்பால் வெகுளாமை - மொழி பெயர்ப்பு Araththupaal Vekulaanmai

                                             வெகுளாமை

301.    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
           காக்கின்என் காவாக்கா

302.    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
           இல்அதனின் தீய பிற.

303.    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
           பிறத்தல் அதனான் வரும்.

304.    நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
           பகையும் உளவோ பிற.

305.    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
           தன்னையே கொல்லுஞ் சினம்.

306.    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
           ஏமப் புணையைச் சுடும்.

307.    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
           நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

308.    இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
           புணரின் வெகுளாமை நன்று.

309.    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
           உள்ளான் வெகுளி எனின்.

310.    இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
            துறந்தார் துறந்தார் துணை.

அறத்துப்பால் வாய்மை - மொழி பெயர்ப்பு, Araththupaal Vaaimal - Translation

                                                வாய்மை

291.    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
           தீமை இலாத சொலல்.

292.    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
            நன்மை பயக்கும் எனின்.

293.    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
           தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

294.    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
           உள்ளத்து ளெல்லாம் உளன்.

295.    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
           தானஞ்செய் வாரின் தலை.

296.    பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
           எல்லா அறமுந் தரும்.

297.    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
           செய்யாமை செய்யாமை நன்று.

298.    புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
           வாய்மையால் காணப் படும்.

299.    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
           பொய்யா விளக்கே விளக்கு.

300.    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
           வாய்மையின் நல்ல பிற.

அறத்துப்பால் கள்ளாமை - மொழி பெயர்ப்பு Araththupaal Kallamai - Translation

கள்ளாமை

281.    எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
           கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

282.    உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
           கள்ளத்தால் கள்வேம் எனல்.

283.    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
           ஆவது போலக் கெடும்.

284.    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
           வீயா விழுமம் தரும்.

285.    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்   
           பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

286.    அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
           கன்றிய காத லவர்.

287.    களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
           ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

288.    அளவறநெஞ்சத் தறம்போல நிற்கும்
           களவறிந்தார் நெஞ்சில் கரவு.

289.    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
           மற்றைய தேற்றா தவர்.

290.    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
           தள்ளாது புத்தே ளுளகு.