Wednesday, June 23, 2010

அறத்துப்பால் அழுக்காறாமை - மொழி பெயர்ப்பு Araththupal Alukkaaraamai

அழுக்காறாமை

161.    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
           அழுக்காறு இலாத இயல்பு.

162.    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
           அழுக்காற்றின் அன்மை பெறின்.

163.    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
           பேணாது அழுக்கறுப் பான்.

164.    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
           ஏதம் படுபாக்கு அறிந்து.

165.    அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
           வழுக்காயும் கேடீன் பது.

166.    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
           உண்பதூஉம் இன்றிக் கெடும்.

167.    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்.

168.    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்.

169.    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
           கேடும் நினைக்கப் படும்.

170.    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
           பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

No comments:

Post a Comment