Thursday, June 24, 2010

அறத்துப்பால் கொல்லாமை - மொழி பெயர்ப்பு, Araththupaal Kollamai - Translation

                                             கொல்லாமை

321.    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
           பிறவினை எல்லாந் தரும்.

322.    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
           தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

323.    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
           பின்சாரப் பொய்யாமை நன்று.

324.    நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
           கொல்லாமை சூழும் நெறி.

325.    நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
          கொல்லாமை சூழ்வான் தலை.

326.    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
           செல்லாது உயிருண்ணுங் கூற்று.

327.    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
           இன்னுயிர் நீக்கும் வினை.

328.    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
          கொன்றாகும் ஆக்கங் கடை.

329.    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
           புன்மை தெரிவா ரகத்து.

330.    உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
           செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
           யவர்.

No comments:

Post a Comment