Thursday, June 24, 2010

அறத்துப்பால் ஒப்புரவறிதல் - மொழி பெயர்ப்பு, Araththupal Oppuravarithal - Translation

ஒப்புரவறிதல்

211.    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
           என்ஆற்றுங் கொல்லோ உலகு.

212.    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
           வேளாண்மை செய்தற் பொருட்டு.

213.    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
           ஒப்புரவின் நல்ல பிற.

214.    ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
           செத்தாருள் வைக்கப் படும்.

215.    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
           பேரறி வாளன் திரு.

216.    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
           நயனுடை யான்கண் படின்.

217.    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
           பெருந்தகை யான்கண் படின்.

218.    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
           கடனறி காட்சி யவர்.

219.    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
           செய்யாது அமைகலா வாறு.

220.    ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
           விற்றுக்கோள் தக்க துடைத்து.

No comments:

Post a Comment