Wednesday, June 23, 2010

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - மொழி பெயர்ப்பு Arathupaal kadavul vaalthu- English Translation

1.    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
       பகவன் முதற்றே உலகு.

2.    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
       நற்றாள் தொழாஅர் எனின்.

3.    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
       நிலமிசை நீடுவாழ் வார்.

4.    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

5.    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
       பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6.    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
       நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7.    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
       மனக்கவலை மாற்றல் அரிது.

8.    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
       பிறவாழி நீந்தல் அரிது.

9.    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்   
       தாளை வணங்காத் தலை.

10.    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
         இறைவன் அடிசேரா தார்.

No comments:

Post a Comment