Thursday, June 24, 2010

அறத்துப்பால் கூடாவொழுக்கம் - மொழி பெயர்ப்பு , Araththupaal Koodavolukam - Translation

கூடாவொழுக்கம்

271.    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
           ஐந்தும் அகத்தே நகும்.

272.    வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
           தான்அறி குற்றப் படின்.

273.    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
           புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

274.    தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
           வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

275.    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
           ஏதம் பலவுந் தரும்.

276.    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
           வாழ்வாரின் வன்கணார் இல்.

277.    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி   
           முக்கிற் கரியார் உடைத்து.

278.    மனத்தது மாசாக மாண்டார் நீராடி
           மறைந்தொழுகு மாந்தர் பலர்.

279.    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
           வினைபடு பாலால் கொளல்.

280.    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
           பழித்தது ஒழித்து விடின்.

No comments:

Post a Comment