Thursday, June 24, 2010

அறத்துப்பால் ஈகை - மொழி பெயர்ப்பு, Araththupal Eekai - Translation

ஈகை

221.    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
           குறியெதிர்ப்பை நீர துடைத்து.

222.    நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
           இல்லெனினும் ஈதலே நன்று.

223.    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
           குலனுடையான் கண்ணே யுள.

224.    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
           இன்முகங் காணும் அளவு.

225.    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
            மாற்றுவார் ஆற்றலின் பின்.

226.    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
           பெற்றான் பொருள்வைப் புழி.

227.    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
           தீப்பிணி தீண்டல் அரிது.

228.    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
           வைத்திழக்கும் வன்க ணவர்.

229.    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
           தாமே தமியர் உணல்.

230.    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
           ஈதல் இயையாக் கடை.

No comments:

Post a Comment